அரசு அதிகாரங்கள் ஏதும் அறியாத மனிதனையும், அதிகாரத்திற்கு நெருக்கமான மனிதனையும் இங்குள்ள அமைப்பு ( system ) வித்தியாசமே இல்லாமல் தன் சுயலாபத்திற்காக இரக்கமின்றி வேட்டையாடபடுவதை உண்மைக்கு மிக அருகில் சென்று சொல்லும் படம் தான் விசாரணை. தன் முந்தைய இரண்டு படங்களிலும் வன்மத்தின் ஆழத்தை காட்சிபடுத்தி இருந்த வெற்றிமாறன் இதில் அரசு அமைப்பின் நேர்மையையும் அவர்களின் வேலையாட்களாய் வரும் காவல்துறையின் மனிததன்மையையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்.
சந்திரகுமார் என்பவர் 90 களில் ஆந்திராவில் வேலை செய்தபோது காவல்துறை இவர் மீதும் இவர் நண்பர்கள் மீதும் செய்யாத குற்றத்திற்காக விசாரணை என்ற பெயரில் நடத்திய மனிதஉரிமை மீறல் தான் இப்படத்தின் முதல் பாகம் லாக் அப் என்ற பெயரில் அவர் எழுதிய புத்தகத்தின் தழுவல் என்பதை படம் துவங்கும் முன் போட்டு ஒரு கலைஞன் க்கான உரிய அங்கீகாரத்தை தந்ததற்கு வெற்றிக்கு மிக பெரிய பாராட்டுகள்.இந்த மாதிரியான மனித உரிமை மீறல்கள் நம் சமுகத்தில் தினம் தினம் நடப்பவை தான் அனால் அதை மிக தைரியமாக ஆவணபடுத்துதல் என்பது மிக அபூர்வமே அதனாலே இப்படம் முக்கியம் பெறுகிறது.
கதைப்படி ஆந்திராவில் ஒரு மளிகை கடையில் வேலை செய்யும் நான்கு இளைஞர்கள் ஒரு அதிகாலையில் என்ன்வென்று தெரியாமல் போலீசால் கைது செய்யப்பட்டு அழைத்துவரபடுகிறார்கள் . அங்கு காரணமே இல்லாமல் தவறை ஒத்துகொள்ள சொல்லி அவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் வன்முறை நிகழ்த்தபடுகிறது. எந்த விவரிப்பும் இல்லாமல் உடனடியாக விரியும் இந்த முதல்காட்சியில் இருந்து படம் துவங்குகிறது. எந்த சமரசத்திற்கும் இடம் அளிக்காமல் இயக்குனர் தன் திரைகதையை மக்கள் முன் விரிக்கிறார் உடனே இதை உள்வாங்கி கொள்ள முடியாமல் போனாலும் இவை எல்லாம் ஒரு மனிதனின் சொந்த அனுபவங்கள் என்று தோன்றும் போது சாய்ந்து அமர்ந்திருந்த பார்வையாளர்கள் நிமிர்ந்து அமர்கிறார்கள்.
1 கோடி மதிப்பிற்கு நடைபெற்ற ஒரு திருட்டு குற்றத்தை முடிக்க தமிழ் பேசும் நான்கு இளைஞர்கள் தேவை அதற்காக வீடில்லாமல் பூங்காவில் தங்கி வாழும் இவர்களை மிக எளிதாக அவர்கள் பிடித்து செல்கிறார்கள். அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் அவர் உய்ரதிகாரி சொல்லும் வசனம் " உன்ன இந்த கேஸ் அ கண்டுபிடிக்கவா சொன்னேன் முடிக்கத்தான சொன்னேன் ". என்ற வசனங்கள் அடையாளம் துறந்து இங்கு பரந்து வாழும் எல்லார் மேலும் ஒரு அதிர்ச்சியாய் விழுகிறது. பணம் ஒரு அதிகாரியின் நேர்மையை எளிதாய் சாயமற்று போக செய்கிறது.
1 கோடி மதிப்பிற்கு நடைபெற்ற ஒரு திருட்டு குற்றத்தை முடிக்க தமிழ் பேசும் நான்கு இளைஞர்கள் தேவை அதற்காக வீடில்லாமல் பூங்காவில் தங்கி வாழும் இவர்களை மிக எளிதாக அவர்கள் பிடித்து செல்கிறார்கள். அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் அவர் உய்ரதிகாரி சொல்லும் வசனம் " உன்ன இந்த கேஸ் அ கண்டுபிடிக்கவா சொன்னேன் முடிக்கத்தான சொன்னேன் ". என்ற வசனங்கள் அடையாளம் துறந்து இங்கு பரந்து வாழும் எல்லார் மேலும் ஒரு அதிர்ச்சியாய் விழுகிறது. பணம் ஒரு அதிகாரியின் நேர்மையை எளிதாய் சாயமற்று போக செய்கிறது.
ஒரு தமிழ் காவல் அதிகாரி மூலம் நீதிமன்றத்தில் உண்மைகளை உடைத்து குற்றமற்றவர்கள் என்று நிருபித்து அவர்கள் வெளியே வரும் போது இதற்கு பிறகு கதை எங்கு செல்ல போகிறது என்ற ஆவல் உண்டாகிறது அதை சற்றும் குறைக்காமல் சமூகத்தில நடந்த உண்மை நிகழ்வுகளை கோர்த்து திரைக்கதை ஆக்கி இவ்வமைப்பின் சதுரங்க ஆட்டத்தில் சிப்பாயும் மன்னனும் விதிவிலக்கல்ல என்று புரிய வைக்கிறார்.
அந்த காவல் அதிகாரியை வைத்து எதிகட்சிக்கு ஆதரவான ஒரு ஆடிட்டரை இன்னொரு மாநிலத்திலிருந்து இந்த இளைஞர்கள் மூலம் கடத்தி வர செய்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இங்கு தமிழ்நாட்டில் அவரிடம் விசாரணை துவங்குகிறது. இந்த அரசியல் குழப்பத்தை தனக்கு சாதகமா பயன்படுத்தி இரு இடத்திலும் பேரம் பேசும் ஒரு மூத்த அதிகாரியின் தவறான விளைவால் அந்த ஆடிட்டர் லாக் அப்பில் மரணம் அடைகிறார்.அவர் மரணத்தை ஒரு தற்கொலையாக மாற்றி முடித்து விட்டு அணைத்து அதிகரிகளும் போடும் கூட்டத்தை வெளியிலிருந்து இந்த இளைஞர்களில் ஒருவன் கேட்கிறான் இறுதியில் இந்த அமைப்பின் வீச்சு எதனை தூரம் வரை செல்கிறது என்பதை விறுவிறுப்பாய் காட்சிபடுத்தி இருக்கிறார்.
இந்த திரைபடத்தின் மிக பெரிய வெற்றி என்பது அதன் கதாபாத்திர தேர்வு முதல் பாகத்தில் வரும் காவல் அதிகாரிகளின் நடிப்பில் தெரியும் வன்முறை மிக நேரடியாக இருக்கிறது அந்த வலியை தினேஷ் முருகதாஸ் மற்ற இரு நடிகர்களும் தங்கள் உடல்மொழியில் செயற்கை தனம் இல்லாமல் வெளிபடுதுகின்றனர். இரண்டாம் பாகத்தில் வரும் வன்முறை ஒரு இருண்ட திரை போல மெல்ல பரவ துவங்குகிறது சமுத்திரகனி கிஷோர் பேசும் வசனங்களில் மறைமுகமாக அந்த அமைப்பு பின்னால் ஒரு சிலந்தி வலை போல இருக்கிறது. கிஷோர் இறக்கும் போது சமுத்திரகனி இடம் சொல்லும் வசனத்தின் உண்மை அவரை சுற்றி உட்கார்ந்து அதிகாரிகள் போடும் கூட்டத்தில் அவர்க்கு தெரியும் போது கையாலகாமல் அவர் அமர்ந்திருக்கும் காட்சிகளில் எத்தனை நேர்மையான அதிகாரியையும் இந்த அமைப்பின் அழுத்தம் விட்டு வைக்காது என்பதற்கு சாட்சி.
அந்த இளைஞர்களிடத்தில் சமுத்திரகனி ஒரு முறை " காசில்லேன்னு பார்க்ல எல்லாம் தூங்கதீங்க ஒரு வீட்ட பாத்து இருங்க டா " என்று சொல்லும் வசனம் ஒரு அசிரிரி போல் நம் காதில் ஒலிக்கிறது படம் முடிந்து வெளியே வரும் பொது .
----------------பாரதிசரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக