
கைபேசி அதிரா இரவுகளில்
கைபேசி தீண்டா விரல்களால்
சப்தங்கள் ஒடுங்கிய தொண்டைக்குள்
தண்ணீர் ஊற்றுகிறேன்
நாவில் பட்டு
அன்னத்தில் தெறித்து
உள்நாக்கை தொட்டு கொண்டு குரல்வளையை அடைந்தும்
தாகம் தணியவில்லை பெண்ணே
உன் வாய்மொழி குடிக்கும் - என்
செவிகளுக்கு மட்டுமே தெரியும்
என் இரவின் தாகத்தை
உன் குரல் நீரால் மட்டுமே
குளிரச் செய்யமுடியும்............
கைபேசி தீண்டா விரல்களால்
சப்தங்கள் ஒடுங்கிய தொண்டைக்குள்
தண்ணீர் ஊற்றுகிறேன்
நாவில் பட்டு
அன்னத்தில் தெறித்து
உள்நாக்கை தொட்டு கொண்டு குரல்வளையை அடைந்தும்
தாகம் தணியவில்லை பெண்ணே
உன் வாய்மொழி குடிக்கும் - என்
செவிகளுக்கு மட்டுமே தெரியும்
என் இரவின் தாகத்தை
உன் குரல் நீரால் மட்டுமே
குளிரச் செய்யமுடியும்............
-----------பாரதிசரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக