பல்லவி..........
உயிரே உன் காதல் கடலில்
படகாய் நான் மாற வேண்டும்.....
உயிரே உன் கடலின் முடிவில்
சந்திரனாய் தோன்ற வேண்டும்...
உன் காதல் தீண்ட கரையாக வாழ்வேன்..
மீண்டும் மீண்டும் தீண்ட காத்திருபேன்.......
தீண்டி செல்லும் நுரைக்கு முத்தம் தருவேன்..
முத்தம் தருவேன்..
சரணம் 1
விண்மீனாய் வானில் நிறைந்திருபேன் அன்பே...
உன் உடல் முழுவதும் பிரதிபலிப்பேன் அன்பே...(2)
பௌர்ணமி நிலவாய் காய்ந்திருப்பேன்..
துடிக்கும் உன் அலைகளை நான் ரசிப்பேன்...
உன் தேகம் முழுவதும் ஒளி தூறல் சிந்துவேன்..
உன் தேகம் முழுவதும் ஒளி தூறல் சிந்துவேன்..
என் ஆழி என்னும் காதல் குடிக்கிறாய்...
எங்கு தாகம் தணிப்பேன்....
சரணம் 2
உன் துளி காதல் கடல்பரப்பாய் அன்பே..
என் கடல் காதல் துளி வடிவாய் அன்பே..
(2 )
நிலவாய் என்னை நீ ஏந்தி கொள்ளு..
மறையும் போது உன்னுள் மூழ்கி கொல்லு..
பிறை தேய தொடங்கினால் அலைகளை மௌனமாக்கிடு...
பிறை தேய தொடங்கினால் அலைகளை மௌனமாக்கிடு...
அடி நிலவு உந்தன் காதல் எல்லாம்..
கடல் நான் அறிந்தது...
உயிரே உன் காதல் கடலில்
படகாய் நான் மாற வேண்டும்.....
உயிரே உன் கடலின் முடிவில்
சந்திரனாய் தோன்ற வேண்டும்...
உன் காதல் தீண்ட கரையாக வாழ்வேன்..
மீண்டும் மீண்டும் தீண்ட காத்திருபேன்.......
தீண்டி செல்லும் நுரைக்கு முத்தம் தருவேன்..
முத்தம் தருவேன்..
சரணம் 1
விண்மீனாய் வானில் நிறைந்திருபேன் அன்பே...
உன் உடல் முழுவதும் பிரதிபலிப்பேன் அன்பே...(2)
பௌர்ணமி நிலவாய் காய்ந்திருப்பேன்..
துடிக்கும் உன் அலைகளை நான் ரசிப்பேன்...
உன் தேகம் முழுவதும் ஒளி தூறல் சிந்துவேன்..
உன் தேகம் முழுவதும் ஒளி தூறல் சிந்துவேன்..
என் ஆழி என்னும் காதல் குடிக்கிறாய்...
எங்கு தாகம் தணிப்பேன்....
சரணம் 2
உன் துளி காதல் கடல்பரப்பாய் அன்பே..
என் கடல் காதல் துளி வடிவாய் அன்பே..
(2 )
நிலவாய் என்னை நீ ஏந்தி கொள்ளு..
மறையும் போது உன்னுள் மூழ்கி கொல்லு..
பிறை தேய தொடங்கினால் அலைகளை மௌனமாக்கிடு...
பிறை தேய தொடங்கினால் அலைகளை மௌனமாக்கிடு...
அடி நிலவு உந்தன் காதல் எல்லாம்..
கடல் நான் அறிந்தது...
--------------பாரதிசரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக