திங்கள், 15 பிப்ரவரி, 2016

இயற்கை


இயற்கை
பூக்களோடு பேசு....... 

கடல் நுரை சேகரி.... 

நிலவை துரத்து... 

வானவில் தொடு.. 

விண்மீன்கள் இணை,ஓவியம் கொணர்.... 

பச்சையம் நுகர்..... 

வெயில் பழகு.... 

பனித்துளி பருகு... 

தூறல் ஏந்து.... 

சாரலில் நட........ 

மழையில் நடனமிடு..... 

இலைகளை தீண்டு...... 

பறவையின் சங்கீதம் கேள்........ 

கானகம் ரசி....... 

அந்தியில் மௌனி ஆகு...... 

அடி வானம் வரை செல்..... 

இயற்கையோடு இணை..... 

உலகம் உன் வசமாகும்........

                                        ----------------பாரதிசரண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக