
உங்கள் இருவர் பிறப்பும் சேர்ந்தே இருந்தது...!
சேர்ந்தே ஒரு நெடும்பயணம் என்றுமே இனி...!
மரணத்தின் வெள்ளை சிறகுகள்...
உங்கள் நாட்களை மூடும் வரை இணைந்திருபீர்கள்..........!
இறைவனின் அமைதியிலும்....
உங்கள் நெருக்கம் நிலைத்திருக்கும்...!
ஆனாலும் உங்கள் நெருக்கம்....
சிறு இடைவெளியோடு இருக்கட்டும்...!
சொர்கத்தின் தென்றல் உங்கள்
இடைவெளிக்குள் வீசி செல்லட்டும்.... !
ஒருவரை ஒருவர் காதலியுங்கள் தொடுதலாய்..
உங்கள் காதலால் உங்களை இறுக்கி கொள்ளாதீர்கள்.........!
கரைகளை தழுவும் கடலலையாய்....
உங்கள் ஆன்மாவை செலுத்துங்கள்..........!
இருவருமே உங்கள் அன்பை நிரப்புங்கள்..
ஒருவரிடத்திலிருந்து மட்டும் பருகாதீர்கள்...!
ஒருவருக்கொருவர் காதலை பரிமாறுங்கள்...
பரிமாறியத்திலிருந்து பகிர்ந்து கொள்ளாதீர்கள்...!
தந்திகள் தனித்திருந்த்தாலும்.....
வீணையின் நாதம் இணைந்தே இசை தருகிறது...!
பாடல்களிலும் நடனங்களிலும் இணைந்தே மகிழ்ச்சியுருங்கள்....!
ஆனாலும் இருவரும் மற்றவரின் தனிமையை அனுமதியுங்கள்...!
இதயங்களை பரிமாறுங்கள்...
ஒருவருக்கொருவர் முழுவதும் ஒப்படைக்காமல்..!
வாழ்வின் கரங்களுக்காக மட்டுமே இதயங்களை திறந்து வையுங்கள்....!
ஒன்றாய் இணைந்த்திருங்கள்,மிக அருகில் அல்லாமல்.....!
கோவிலை தாங்கும் தூண்களை போல....!
ஒரு மரத்தின் நிழலில் வளராத இன்னொரு மரத்தை போல...!
சேர்ந்தே ஒரு நெடும்பயணம் என்றுமே இனி...!
மரணத்தின் வெள்ளை சிறகுகள்...
உங்கள் நாட்களை மூடும் வரை இணைந்திருபீர்கள்..........!
இறைவனின் அமைதியிலும்....
உங்கள் நெருக்கம் நிலைத்திருக்கும்...!
ஆனாலும் உங்கள் நெருக்கம்....
சிறு இடைவெளியோடு இருக்கட்டும்...!
சொர்கத்தின் தென்றல் உங்கள்
இடைவெளிக்குள் வீசி செல்லட்டும்.... !
ஒருவரை ஒருவர் காதலியுங்கள் தொடுதலாய்..
உங்கள் காதலால் உங்களை இறுக்கி கொள்ளாதீர்கள்.........!
கரைகளை தழுவும் கடலலையாய்....
உங்கள் ஆன்மாவை செலுத்துங்கள்..........!
இருவருமே உங்கள் அன்பை நிரப்புங்கள்..
ஒருவரிடத்திலிருந்து மட்டும் பருகாதீர்கள்...!
ஒருவருக்கொருவர் காதலை பரிமாறுங்கள்...
பரிமாறியத்திலிருந்து பகிர்ந்து கொள்ளாதீர்கள்...!
தந்திகள் தனித்திருந்த்தாலும்.....
வீணையின் நாதம் இணைந்தே இசை தருகிறது...!
பாடல்களிலும் நடனங்களிலும் இணைந்தே மகிழ்ச்சியுருங்கள்....!
ஆனாலும் இருவரும் மற்றவரின் தனிமையை அனுமதியுங்கள்...!
இதயங்களை பரிமாறுங்கள்...
ஒருவருக்கொருவர் முழுவதும் ஒப்படைக்காமல்..!
வாழ்வின் கரங்களுக்காக மட்டுமே இதயங்களை திறந்து வையுங்கள்....!
ஒன்றாய் இணைந்த்திருங்கள்,மிக அருகில் அல்லாமல்.....!
கோவிலை தாங்கும் தூண்களை போல....!
ஒரு மரத்தின் நிழலில் வளராத இன்னொரு மரத்தை போல...!
-----கலீல் ஜிப்ரான் (பாரதிசரண் - தமிழாக்கம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக