வெயிலேறிய முற்றத்தில்
வேப்பம்பூ உத்திர
வாசல் நடை குளிர்ச்சி தாங்கி
அமர்ந்திருந்த என்னையும்
செண்பகம் அக்கா பிழிந்து போட்ட பழைய சாதத்தை
நக்கி கொண்டிருந்த நாயையும்
கோமு அத்தை பியித்து போட்ட இட்லியை
கொத்தி கொண்டிருந்த காக்கையையும்
சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த அணில்
அவைகள் சாப்பிட்டு சென்றதும்
வேப்பமர மூட்டின் வழியாக மரமேறி மறைந்து போனது
என்னை மட்டும் விட்டு ...
----------பாரதிசரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக