வியாழன், 18 பிப்ரவரி, 2016

ஒரு காலை 11 மணி





வெயிலேறிய முற்றத்தில் 
வேப்பம்பூ உத்திர 
வாசல் நடை குளிர்ச்சி தாங்கி 
அமர்ந்திருந்த என்னையும் 

செண்பகம் அக்கா பிழிந்து போட்ட பழைய சாதத்தை 
நக்கி கொண்டிருந்த நாயையும்

கோமு அத்தை பியித்து போட்ட இட்லியை 
கொத்தி கொண்டிருந்த காக்கையையும் 

சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த அணில் 
அவைகள் சாப்பிட்டு சென்றதும் 
வேப்பமர மூட்டின் வழியாக மரமேறி மறைந்து போனது 
என்னை மட்டும் விட்டு ...

                              ----------பாரதிசரண் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக