இருட்டு அறைகளில்
கவிந்து கிடக்கிறது அச்சம்.
அநாதரவான தனிமையில்
உயிர்பெறுகிறது
அமானுஷ்யம்.
சிறு ஒலிதுணுக்கில்
பேரமைதி அதிர்கிறது.
நினைவின் அடுக்கில்
பேய்கதைகள்
மேலுழுகிறது.
உள்ளறைகளில்
என்னை தவிர
இன்னொன்று நிறைகிறது.
இப்போது திரும்பி
பார்க்க முடிவதில்லை.
பின்புறம் குளிர்ச்சி பரவுகிறது.
தோள்களில் வியர்வை
துளிர்க்கிறது.
சட்டென வெளிச்சம் மீள்கிறது.
இனி இருளுக்கென ஒரு
உலகம் இவ்வீட்டில்
பிறந்துவிட்டது.
கவிந்து கிடக்கிறது அச்சம்.
அநாதரவான தனிமையில்
உயிர்பெறுகிறது
அமானுஷ்யம்.
சிறு ஒலிதுணுக்கில்
பேரமைதி அதிர்கிறது.
நினைவின் அடுக்கில்
பேய்கதைகள்
மேலுழுகிறது.
உள்ளறைகளில்
என்னை தவிர
இன்னொன்று நிறைகிறது.
இப்போது திரும்பி
பார்க்க முடிவதில்லை.
பின்புறம் குளிர்ச்சி பரவுகிறது.
தோள்களில் வியர்வை
துளிர்க்கிறது.
சட்டென வெளிச்சம் மீள்கிறது.
இனி இருளுக்கென ஒரு
உலகம் இவ்வீட்டில்
பிறந்துவிட்டது.
--------------------------------பாரதிசரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக