ஒரு பூதக்கண்ணாடி கிடைக்கும்
பொழுது
சுருங்கிவிடுகிறது உலகம்.
நுண்ணியவைகளை
கூர்ந்து நோக்கி
ஆடியின் வழி
உருப்பெருக்கு அடைகிறது
அளவுகளின் புறஉலகு.
ஈயின் இறகுகளில்
காக உடல்நிறைகிறது.
தாத்தா செடியின் கொண்டையில்
சூரியகாந்தி இதழ் விரிகிறது
கச்சிதமான கற்பனைகள்
மாயத்தோற்றத்தில்
பருப்பெறுகிறது.
மாயஉருவங்களாய் நாமும்
யாரோ ஒருவரின்
பூதக்கண்ணாடியின் பின்புறத்தில்.
-------------பாரதிசரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக