வியாழன், 11 மே, 2017

கவிதை நேரம்





ஒரு அழகான கவிதை எழுதி வெகு நாட்கள் ஆகிவிட்டது..
எல்லா சந்தர்ப்பங்களையும் கவிதையாக்க முயன்று கொண்டிருந்தது மனது
காலம்  அவள் இல்லா சந்தர்ப்பம் ஒன்றை நிறுத்தி விட்டு செல்லும் வரை....
அதன் பின் மொழிகள் எல்லாம் கவிதையாக்கி விட துடித்தது மனது..
கணம் நிறைத்த வரிகளுக்குள் வாழ்வை கண்டடைந்தது  வரை...
சிறந்த தருணத்தை ஒரு வாழ்வனுபவமாக மாற்ற காத்து கொண்டிருக்கும் பொழுதெல்லாம்..
சட்டென சிறகு உதிர்த்து பறந்து செல்கிறது நீலவானுக்குள் ஓர் ஒற்றை காகம் ...
                                                     
                                                                                                       -------பாரதிசரண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக