செவ்வாய், 31 மே, 2016

புத்தகங்கள்.

எல்லையில்லா பெருவெளிக்குள் சுற்றித்திரியும் தேசாந்திரியை போல் புத்தகங்கள் என்னை நதி பிரவாகத்தின் சுழற்சிக்குள் இழுத்துக் கொள்கின்றன.புறம் மறந்த துறவி போல் எழுத்தாளனின் அகவுலகுக்குள் நுழைந்து அவன் ஆன்மாவிடையே ரகசியம் பேசச் செய்கின்றன. எத்தனையோ சாமான்ய மனிதர்களின் வாழ்க்கைக்குள் அழைத்துச் சென்று அவர்கள் வாழ்வனுபவங்கள் வழியே என்னை உய்த்திருக்க வைக்கின்றன.
தவறுகளுக்கான சந்தர்பங்களையும்,தோல்விகளின் ஏமாற்றத்தையும் மறந்த வரலாற்றை காலத்தின் உதவி கொண்டு கீறி சமரசமில்லாத உண்மையை உரைக்கின்றன.காதலின் தீவிரத்தையும் ,காமத்தின் மென்மையும் கவிதைகள் மேல் ஏற்றி அகம் பேசுகின்றன.விளங்க முடியா இறைமையை, தத்துவத்தின் கருத்துக்களாக்கி விவரிக்கின்றன. என்னால் செல்ல முடியாத எத்தனையோ தேசங்களின் தெருக்களிலும் புல்வெளிகளிலும் கைப்பிடித்து நடத்திச் செல்கின்றன.
விவரிக்க முடியா கற்பனை உலகத்தை அழகியலோடு பிரம்மாண்டமாய் என்னுள் விரியச் செய்கின்றன. என் முடிவுகளுக்கும், தர்க்கங்ளுக்கும்,நியாங்களுக்கும் தேர்ந்த ஆசானைப் போல் என்னுடன் விவாதித்து என்னை ஒரு அறம் கொண்ட மானுடனாக சமைக்கின்றன #

புத்தகங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக