திங்கள், 23 மே, 2016

நிலவு யானை கடல் - நீ & நான்

மத்தகம் அகண்ட யானைகள் நடக்கும்
ஒரு அடர் காட்டினுள்ளும் ...

வெண்மை ஒழுகும் பௌர்ணமி நிலவின்
ஒரு பெரு  வெளி பாதையிலும்

அலைகள் உயர்ந்து அடங்கும் கடலின்
ஒரு நீண்ட கடற்கரையிலும்

தனியனாய் நான் மட்டும் ரசிக்க
எனக்கொரு நாள் வேண்டும்

அவ்யானையின் மென் அசைவாய்
அப்பௌர்ணமியின்  ஒளி விரிவாய்
அவ்வலைகளின் சீரிசையாய்
என்னோடு நீ வேண்டும்

                       -----------    பாரதிசரண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக