திங்கள், 15 பிப்ரவரி, 2016

இனி இல்லை ஒரு நட்பு......


இனி இல்லை ஒரு நட்பு......
தனிமை குடிக்கும் என் இரவுகள் எல்லாம் 
நெஞ்சம் கிழிக்கும் மௌனங்களாலும் 
வெறுமை புசிக்கும் நேரங்களாலும் 
ஆறுதல் தேடும் என் இதய கூட்டை 
அன்பின் நினைவுகளால் தீட்டப்பட்ட கூரிய கத்தி கொண்டு 
நட்பு எனும் சதையாகவும் 
அதில் ஓடும் நம் நாட்கள் வழியும் ரத்தமாகவும் 
அறுத்து எறிகின்றன... 
இனி அறுபட என்னிடம் நெஞ்சம் இல்லை.. 
ஆதலால் என்னுள் இனி ஒரு நட்பு இல்லை....
                                       --------------------பாரதிசரண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக