திங்கள், 15 பிப்ரவரி, 2016

உண்மை விதையும் ,குப்பை பொய்யும்


நிதர்சனங்கள் உணர்த்தும் உண்மை பரப்பில்...... 
தேங்கிக்கிடக்கும் வலிகள் யாவும்... 
முன்னொரு நாள்... 
தப்பிக்க வழி தேடி... 
நான் வீசி சென்ற குப்பை பொய்கள்.... 

இன்று தூர் வார இறங்கும் எனக்கு... 
குப்பைகளின் கீழ் ஒளிந்திருக்கும் உண்மை விதை... 
தன் நிஜத்தை உலகுக்கு காட்ட பாதை தேடி கொண்டிருக்கிறது.... 

குப்பையோடு சேர்ந்து விதையும் எடுக்க முடியும் என்றாலும்... 
என்மேல் வீசும் துர்நாற்றத்தை... 
துளிர்க்கும் அந்த இலையின் பசுமை கொண்டு 
மட்டுமே போக்க முடியும்... 

என் பசுமை என் கைகளுக்குள்... 
உங்கள் துர்நாற்றத்தின் இலையை.. 
இப்போதாவது தேட துவங்குங்கள்.......

                                    ------------பாரதிசரண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக