2 ஆம் நடைமேடை
வந்துசேரும் மின்தொடர்வண்டியில் இருந்து தான் நேற்று இறங்கினேன்.
இன்று எற போகும் அதே வண்டியில்
நேற்று என்னுடன் இறங்கிய முகத்தை
தேடுகிறேன்.
எத்தனையோ முகங்கள் கடந்து போகும்
ரயில் பயணத்தில்
அறிமுகம் இல்லாத ஒருவரை
மீண்டும் சந்திப்பது போல தான்
வாழ்க்கை .
தற்செயலாக ஒரு புன்னகை உதிர்க்க
மொத்த வாழ்வின் ஓட்டத்தில்
சிற்சில கணங்களை கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக