இந்திய
அரசியல் களம் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் போட்டியாளர்
இல்லாத ஒற்றைப்படை தன்மை கொண்ட ஒரு தலைவரை உருவாக்கி விட்டிருக்கிறது. உ பி இல்
பா.ஜ.க வின் மிக பெரிய வெற்றி மோடியின்
வளர்ச்சி பிம்பம் இன்னும் குறைந்துவிடவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
ரெண்டு
ஆண்டுகளுக்கு முன் நடந்த டெல்லி தேர்தல்
தோல்வி என்பது அறிவார்ந்த மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் 15
ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் அதிருப்தியால் நிகழ்ந்தது. பீகார் தேர்தல்
தோல்வி இரண்டு முரண்பட்ட எதிர் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணி
மூலம் கிடைத்தது. ஆனால் உத்திரபிரதேச தேர்தல் களம் என்பது பெரும்பான்மை இந்திய
மக்களின் மனநிலையை பிரதிபலிக்க கூடியது , நாட்டின் மிகப்பெரிய வாக்காளர்களை கொண்ட மாநிலம் அதை
வெற்றி அடைந்திருப்பதன் மூலம் பா.ஜ.க தனது அரசியல் ஸ்திரத்தன்மையை
உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஆட்சி
நிர்வாகத்திலும் தேசிய அளவில் தனிபெரும்பான்மை கொண்ட கட்சியாக
வளர்ச்சியடைந்துள்ளது.
சமாஜ்வாடி , பகுஜன்
சமாஜ்வாடி , காங்கிரஸ்
என்ற மூன்று பெரும் கட்சிகளை பின்னுக்கு தள்ளி , உற்றகாண்டில் காங்கிரெஸ்ஸை வீழ்த்தி , கோவா
வில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து , வடகிழக்கில் நேரடியாக ஆட்சியில் அமர ஆயத்தமாகி
மாநில அளவிலும் , தேசிய
அளவிலும் தனி பெரும் சக்தியாக உருவெடுத்துருக்கிறது. பஞ்சாபின் தோல்வி என்பது
அகாலிதளம் அடைந்த தோல்வி மட்டுமே , அங்கே போதை பொருளால் மாநிலமே அழிந்து கொண்டிருப்பதை
வேடிக்கை பார்த்ததால் மக்கள் வெறுப்பு அலையால் ஆட்சி காங்கிரஸ் வசம் சென்றுள்ளது .
அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி ஆசையால் ஆம் ஆத்மி தனது அடுத்த கட்ட நகர்வில் சற்று
பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. எனினும் எதிர்க்கட்சி வரிசையில் இடம் பெற்றிருப்பது
அதன் வளர்ச்சியே.
காங்கிரஸ் ஒட்டு மொத்தமாக அதன் நம்பிக்கையை மக்களிடத்தில் இழந்து
வருகிறது.அதன் தேசிய தலைமை மிக பெரிய மாற்றத்திற்கு உட்படாத வரை , மோடிக்கு
எதிரான போட்டியாளரை அவர்களால் நிறுவ முடியாது . ராகுலால் சிறந்த மாற்று
தலைவராக பிரகாசிக்க முடியவில்லை என்பதை
எல்லா தேர்தல்களும் தெளிவாக உணர்த்திவிட்டது . நேரு குடும்பத்திலிருந்த இன்னும்
தலைமைக்கு ஆட்களை எதிர்பார்த்து
கொண்டிருப்பது கட்சியின் இறுதிக்காலத்தை அவர்களே உருவாக்கி விடுவதர்கு சமம்.
எதற்க்காக
காங்கிரஸ் இதை செய்ய வேண்டுமெனில், மொத்த தேசமெங்கும் போட்டி இல்லாத ஒற்றை தலைமை
உருவாவது அரசியல் களத்தை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல் , கேள்வி
எழுப்ப முடியாத எதிர்தரப்பை உருவாக்கி
விடும். எனவே காங்கிரஸ் தனது உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, மாநில
தலைமைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரே
கட்சி தேசிய அளவிலும் , மாநில
அளவிலும் அடையும் பெரு வளர்ச்சியானது , பிராந்திய கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தி , தேசத்தின் பன்முகத்தன்மையை நீர்த்து போக செய்து
ஒற்றைப்படுத்தலுக்கு வழிவகுக்கும்.அவர்கள் மதத்தையும் மொழியையும் கொண்டு இதை
எளிதாக நிகழ்த்தி விடுவார்கள்.
நீங்கள் பின்பற்றும் மதம் தான் உங்களை உங்கள் அரசியல் தலைமையை நிர்ணயிக்க செய்யும் எனில் , கூடிய
விரைவில் நீங்கள் உங்கள் இன , மொழி அடையாளங்களை இழக்க நேரிடும். கடந்த 50 ஆண்டு
தேசிய அரசியல் களத்தின் மிக பெரிய சவால் இந்த பன்மொழி அரசியல் தான், ஆனால்
தற்போது தென் மாநிலங்கள் 4,
வடகிழக்கு
மாநிலங்கள் 8 தவிர
மற்ற அணைத்து மாநிலங்களும் இந்தி மொழி என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ்
கட்டமைக்கப்பட்டுள்ளது. இனி இவர்கள் இந்த பொது தன்மையை தேசம் முழுதும் விரிக்க
செய்வார்கள் , அதற்கு
கீழ் வராத மாநிலங்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு அதன் வளர்ச்சியின் மீது
அதிகாரத்தின் பேரில் கட்டுபாடுகள் விதிக்கப்படும். தற்போது தமிழக்தில் நிகழ்வது
இது தான் . தேசிய அரசியலில் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறது.
தேசத்தின் வளர்ச்சி என்ற பெயரில் பா.ஜ .க வின்
அரசியல் கொள்கைகள் மாநிலத்தின் மொழி, பண்பாட்டு, கலாச்சார
விழுமியங்களை புறக்கணித்துவிட்டு முன்னெடுக்கபடுமாயின் அதற்க்கான எதிர்வினைகள்
இந்தியாவெங்கும் தாமரை மலரும் என்கிற உங்கள் நீண்ட கால கனவை சிதைக்கும் வகையில்
ஒவ்வொரு மாநிலத்திலிருந்து உருவாகி வரும்.
ஆனால் தற்போது உள்ள அனைத்து பிராந்திய கட்சிகளும் எதோ
ஒரு வகையில் பா.ஜ .க ஓடும் காங்கிரஸ் ஓடும் கூட்டணி அமைத்து கொண்டதன் வழி அதன்
மாற்று முகத்தை இழந்து விட்டது , எனினும்
தற்போதைய சூழ்நிலையில் அப்படி ஒரு மாற்று
கட்சியாக ஆம் ஆத்மீயை தவிர வேறு எந்த கட்சியும் பிராந்திய அளவில் இல்லை என்பதே
உண்மை.
கட்டுரையாளர் : சரவணன்.S
தொடர்புக்கு : srisaran15@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக