வெள்ளி, 2 செப்டம்பர், 2016

ஆச்சி

மரணம்
வாழ்வின் எல்லா நினைவுகளோடு இறுதியாகிறது



பேதைஎன நீ சுற்றித்திரிந்த காயல்பட்டின வீதிகளை
ஒரு முறை சென்று பார்க்க வேண்டும்..
நெகிழ்ந்த தோலோடு இறகென  உன்னை கண்டதற்க்காக  


எங்கள் தாத்தாவை நீ கரம் பற்றிய காட்சிகளை
கேட்டு உணர வேண்டும்...
இரு கட்டிலை அருகருகே படுத்து பென்னலூரில்
நீங்கள் வாழ்ந்த மூப்பின் நாட்களை அர்த்தப்படுத்த

ஐந்து மகளும் ஓர் மகனுமென .
நீயம் தாத்தாவும் வாழ்ந்த
ஆத்தூர் வீட்டின்
அறைகளுக்குள் சென்று நிற்க வேண்டும்
இந்த பெரிய குடும்பத்தின் மரமொன்று
கிளைகள் விரித்து பரந்து நிற்பதன்
வேரின் ஆழம் அறிய..

நீ இறுதியாய் சுவாசம் நிறுத்திய
இடம் வந்து வணங்க வேண்டும்..
ஒரு பெரு வாழ்வின் அத்தனை
அனுபவங்களுக்கும் சாட்சியாய்
தெய்வமாய் எங்களோடு
எல்லாமுமாய் என்றும் நீ இருக்க
" ஆழ்வார் ஆச்சி "


                               -----------பாரதிசரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக