நீல விசும்பில் நீந்தி செல்கிறது பருந்து
அந்தரத்தில் அலைதலில் நிலை கொள்கிறது
வாழ்வு எல்லாம் வெளியோடு மட்டும் உரசி கொண்டிருக்கிறது
எடையற்று இருத்தலின் இயல்பை ஏற்றிருக்கிறது.
ஆகாயம் முழுதும் ஆள்கிறது
இறை என உயரத்தில் இருந்து
இயங்கும் உலகை தாழ்த்தி பார்க்கிறது
ஒரு நாளின் ஒரு பொழுதேனும்
மண் மேல் கால் பதித்து பறவையாய் ஆகி விடுகிறது.
---------------------------பாரதி சரண்